தொகுதி முழுவதும் 'லொல்...லொல்..' மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்த வானதி...!

published 1 year ago

தொகுதி முழுவதும் 'லொல்...லொல்..' மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்த வானதி...!

கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன்  அவரது தெற்கு தொகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் நாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மாநகராட்சி ஆணையாளருக்கு விடுத்துள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதியில் சமீப காலமாக தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரங்களில் தெரு நாய்கள் குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்ப்பட்ட வண்ணம் உள்ளது. மேலும் சில தெரு நாய்கள் வெறிபிடித்து திரிவதால் தெருவில் பொது மக்கள் நடந்து வரவே அச்சம்மடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தெருவோர நாய்களுக்கு கருத்தடை ஊசிகள் போடவும், நாய்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வேண்டிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe