போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்- அமர வைத்து பாடம் கற்பித்த கோவில்பாளையம் காவல்துறையினர்...

published 1 year ago

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்- அமர வைத்து பாடம் கற்பித்த கோவில்பாளையம் காவல்துறையினர்...

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பிலும் போக்குவரத்து காவல்துறை சார்பிலும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு நாட்களில் போக்குவரத்து விதிகள் சாலை பாதுகாப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவையில் கோவில்பாளையம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலிசார் அவர்களை அமர வைத்து போக்குவரத்து விதிகள் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம் என உறுதி மொழி ஏற்க செய்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் விதிகளை மீறி சில வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவில்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், SNS கல்லூரியின் NSS மாணவர்கள், ரூட்ஸ் உயிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe