கோவையில் பஸ்சில் பிக்பாக்கெட்- வாலிபர் கைது…

published 1 year ago

கோவையில் பஸ்சில் பிக்பாக்கெட்- வாலிபர் கைது…

கோவை: கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் விஜயன்(53). பழ வியாபாரி. இவர் நேற்று பஸ்சில் உக்கடத்தில் இருந்து செல்வபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் நைசாக அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 500 ஐ திருடி தப்பிக்க முயன்றார். 

இதனைப்பார்த்து சுதாரித்த விஜயன் அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பணம் திருடியது ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த டிரைவர் வெற்றிவேல் முருகன்(22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe