கணபதியில் வீடு புகுந்து ரூ. 5 ஆயிரம் திருட்டு…

published 1 year ago

கணபதியில் வீடு புகுந்து ரூ. 5 ஆயிரம் திருட்டு…

கோவை: கோவை கணபதியை சேர்ந்தவர் மாதையன்(37). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. 

உள்ளே கப்போர்டில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை. வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பணத்தை திருடி சென்றுவிட்டார். இது குறித்து மாதையன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe