மாதம் ரூ.75 ஆயிரம் லாபம்.. ஆசை வார்த்தை கூறி கோவையில் லட்சக்கணக்கில் மோசடி!

published 1 year ago

மாதம் ரூ.75 ஆயிரம் லாபம்.. ஆசை வார்த்தை கூறி கோவையில் லட்சக்கணக்கில் மோசடி!

கோவை: கோவையில் மாதம் ரூ.75 ஆயிரம் லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.10.50 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவர் கோவை சிட்கோவில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு கோவை காந்திபுரத்தில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தும் லோகேஷ் என்பவர் அறிமுகமானார்.

அப்போது லோகேஷ், வெங்கடேசிடம் தனது நிறுவனத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.75 ஆயிரம் லாபம் தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய வெங்கடேஷ் கடந்த 2019ம் ஆண்டு ரூ.15 லட்சத்தை லோகேசிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து முதல் 6 மாதங்கள் மட்டும் ரூ.75 ஆயிரம் என மொத்தம் ரூ.4.50 லட்சத்தை வெங்கடேசிடம் லோகேஷ் கொடுத்தார். அதன்பின்பு மாதம் தோறும் கொடுப்பதாக உறுதியளித்த தொகையை கொடுக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேஷ் கேட்டபோது, பல காரணங்களை கூறி லோகேஷ் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதன் பின்பு 2 காசோலைகளை வெங்கடேசிடம் கொடுத்தார்.

அந்த காசோலைகள் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதுகுறித்து வெங்கடேஷ் கேட்டபோது, அவரை லோகேஷ் மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக வெங்கடேஷ் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தனியார் நிறுவன உரிமையாளர் லோகேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe