பீடி புகைத்த போது தீப்பிடித்து மூதாட்டி பலி

published 2 years ago

பீடி புகைத்த போது தீப்பிடித்து மூதாட்டி பலி

கோவை, ஜூலை.10-
திண்டுகல்லை சேர்ந்தவர் அமராவதி (வயது 60). இவர் ஆனைமலை பகுதியில் சாைலயோரம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் பீடி புகைத்ததாக தெரிகிறது.
அப்போது அதில் இருந்த தீ அவரது உடையில் பற்றியது. தீ திடீரென உடல்  முழுவதும் மளமளவென பரவியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம்போட்டார்.அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர்  ஓடி வந்த தீயை அனைத்தனர். 

பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ்  மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe