டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

கோவை: விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைகள் கழகம், சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்தும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe