கோவையில் பார் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது…

published 11 months ago

கோவையில் பார் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது…

கோவை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமலை(52). இவர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். 

நேற்று திருமலை பைக்கில் கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள டீ கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் திருமலையை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து தப்பினார். 

 

இது குறித்து திருமலை போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பார் ஊழியர் திருமலையிடம் பணம் பறித்தது கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த டேவிட்ராஜா(25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe