தவறுதலாக பணம் அனுப்பிய கோவை தொழிலதிபர்.. பணத்துடன் மாயமான தொழிலாளர்கள்!

published 11 months ago

தவறுதலாக பணம் அனுப்பிய கோவை தொழிலதிபர்.. பணத்துடன் மாயமான தொழிலாளர்கள்!

கோவை: கோவை கணபதி பகுதியில் கட்டுமான அலுவலகம் வைத்திருப்பவர்  பாஸ்கரன். இவரது நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிவம் நாயக், பிரபாகரன் நாயக் ஆகிய இருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளனர்.  

இந்நிலையில் பாஸ்கரன் கடந்த மாதம் சம்பளம் போடும்பொழுது 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை சிவம் நாயக் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தவறுதலாக பணம் அனுப்பியதை உணர்ந்த பாஸ்கரன் உடனடியாக சிவம் நாயக்கை அழைத்து அந்த பணத்தை திங்கட்கிழமை வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.

 

இந்நிலையில் இன்று காலை அவர் சைட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது சைட்டில் அவர்களை  காணவில்லை. பின்னர் இது குறித்து விசாரிக்கும் பொழுது நேற்று இரவே அவர்கள் அவர்களது ஊருக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பாஸ்கரன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து  வங்கி கணக்கு முடக்கப்பட்டு ஆய்வு செய்ததில் ஏற்கனவே ஒரு லட்சத்தை அவர்கள் எடுத்து கொண்டு விட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், இத்தனை நாட்களாக வேலை செய்துவிட்டு துரோகம் இளைத்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தன்னால் அந்த நம்பிக்கை துரோகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என வேதனையடைந்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe