கோவையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை- துக்க நிகழ்வுக்கு சென்ற நேரத்தில் திருட்டு...

published 11 months ago

கோவையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை- துக்க நிகழ்வுக்கு சென்ற நேரத்தில் திருட்டு...

கோவை: கோவையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. துக்க நிகழ்வுக்கு சென்றிருந்தபோது இந்த துணிகர சம்பவம் நடைபெற்றது.

கோவை உப்பிலிபாளையம் இந்திரா கார்டன் ரோடு விவேகானந்தா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (53). தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கவுண்டம்பாளையத்தில் இறந்த உறவினர் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டார். நேற்று வீடு திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க செயின், வளையல், ஆரம் உள்ளிட்ட ரூ.19 லட்சம் மதிப்பிலான 38.5 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. 

வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மோகன்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். 

அங்கு வீடு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe