கோவையில் தலையணைக்கு அடியில் வைத்த 10 பவுன் நகை மாயம்…

published 11 months ago

கோவையில் தலையணைக்கு அடியில் வைத்த 10 பவுன் நகை மாயம்…

கோவை: கோவை அழமு நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் மனைவி நித்யா(40). கவரிங் நகை கடை நடத்திஙவருகிறார். 

இவர் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி தலையணை அடியில் வைத்துவிட்டு துாங்குவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் அதேபோல தனது 10 பவுன் தங்க நகைகளை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கினார். 

மறுநாள் காலை நித்யாவின் வீட்டின் உரிமையாளர் வீட்டில் கரப்பான் பூச்சிக்கு மருந்து தெளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பூச்சி மருந்து தெளிக்க அவரது வீட்டிற்கு இரண்டு பேர் வந்தனர். 

அவர்களுக்கு உதவ நித்யா தனது கடையில் பணிபுரியும் பெண் ஒருவரையும் அழைத்திருந்தார். வீட்டில் பணிகள் முடிந்ததும் அனைவரும் புறப்பட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து நித்யா தலையணைக்கு அடியில் பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த, 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. 

புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe