மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி பாஜக வில் இணைந்தார்...

published 11 months ago

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி பாஜக வில் இணைந்தார்...

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாநில செயலாளர்(பரப்புரை) பதிவி வகித்து வந்தவர் அனுஷா ரவி. இவர் தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மக்கள் நீதி மய்யத்திற்கு அளித்துள்ள அறிக்கையில், தேர்தல் அரசியலில் (Electoral Politics) மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனை அனுஷா ரவி அவரது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மக்கள் நீதி மய்யம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் ஆனால் திமுகவிற்கு தங்கள் ஆதரவு இருக்கும் எனவும் ராஜ்யசபா வில் சீட் கேட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்து. இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சிலர் ஏற்று கொள்ளவில்லை கூறப்பட்டு வந்த நிலையில் அக்கட்சியில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்து வந்த அனுஷா ரவி கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe