நாளை பிரதமர் கோவை வருகை - மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி..

published 11 months ago

நாளை பிரதமர் கோவை வருகை - மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி..

கோவை: கோவை சாய்பாபா கோவில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் வரையிலான பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. 

இதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த பகுதிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு 24 மணி நேரமும் காவல்துறை ரோந்து வாகனங்கள் சென்று வருகின்றனர்.

மேலும் கண்காணிப்பு கேமராக்களும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடைய பிரதமர் வருகையொட்டி இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அதில் விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் அங்கிருந்து காரில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு சாய்பாபா கோவில் சந்திப்புக்கு வருகிறார். 

அதனைத் தொடர்ந்து சாய்பாபா கோவில் சந்திப்பிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரை ரோட் ஷோவில் கலந்து கொள்ளும் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், தமிழ்நாடு காவல்துறை வாகனங்களும் அணிவகுத்து சென்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe