பொள்ளாச்சியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு...

published 10 months ago

பொள்ளாச்சியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு...

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பாக பொள்ளாச்சி பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

 

கோவை மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் பொள்ளாச்சியில் மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என‌ சுமார் 462 நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe