பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது கோவை போலிசார் வழக்குப்பதிவு...

published 10 months ago

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது கோவை போலிசார் வழக்குப்பதிவு...

கோவை: கோவையில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ பாதிரியார்களை சந்திக்க வந்தார். தொடர்ந்து அவர் வாகனத்தில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்தார். 

வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி ஒற்றை சாளர முறையில் உரிய அனுமதியின்றி அவர் பிரசாரம் செய்ததாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்ததாக பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம், துரைராஜ், கனகராஜ், கணேஷ், அருண் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe