பிறை பார்த்து நோன்பு நாள் அறிவிப்பு செய்யும் கூட்டம் தேதி அறிவிப்பு...

published 10 months ago

பிறை பார்த்து நோன்பு நாள் அறிவிப்பு செய்யும் கூட்டம் தேதி அறிவிப்பு...

கோவை: பிறை பார்த்து நோன்பு நாள் அறிவிப்பு செய்யும் கூட்டம்
நாளை நடக்கிறது.


கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியின் தலைவர் மெளலவி அல்ஹாஜ் அப்துர் ரஹீம் இம்தாதி பாகவி மற்றும் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் நாசர்தீன் ஆகியோர் கூட்டாக அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோயமுத்தூர் ஹிலால் (பிறை பார்க்கும்) கமிட்டியின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக மாதம் தோறும் பிறை பார்க்கும் கூட்டம் நடந்து வருகின்றது. 

அதனடிப்படையில், இந்த வருடத்தின் ஷவ்வால் மாத பிறை பார்த்து நோன்பு பெருநாள் அறிவிப்பு செய்யும் கூட்டம் நாளை தொழுகைக்கு பின் 7 மணிக்கு கோவை கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் உள்ள ஷம்சுல் இஸ்லாம் ஹனஃபி சுன்னத் ஜமாஅத்  பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்திற்கு அனைத்து உலமாபெருமக்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe