கோவையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் சடலமாக கண்டெடுப்பு...

published 10 months ago

கோவையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் சடலமாக கண்டெடுப்பு...

கோவை: கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் ஜோசப்(50). எலக்ட்ரீசியன். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். 

இதற்கிடையே அவரது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாததால், கடந்த 7ம் தேதி அவர் நீலிகோணாம்பாளையத்தில் உள்ள மற்றொரு மகனின் வீட்டில் சென்று தங்கினார். வீட்டில் பிரின்ஸ் ஜோசப் மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 

இது குறித்து அக்கம்பக்கத்தினர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பிரின்ஸ் ஜோசப் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. 

அவர் உடல் நலம் சரியில்லாமல் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe