கோவையில் கொள்ளை அடிக்கத் திட்டம்; ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர்!

published 9 months ago

கோவையில் கொள்ளை அடிக்கத் திட்டம்; ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர்!

கோவை: கோவையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக செல்வபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது என்.எஸ்.கே. தெரு அருகே காலி மைதானத்தில் ஒரு கும்பல் நின்றிருந்தது. 

அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் செல்வபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் கோவை செல்வபுரம் கல்லாமேட்டை சேர்ந்த அப்பாஸ் (24), பிரகதீஷ் (24), முபில் (24), செட்டிவீதியை சேர்ந்த சஞ்சீவ் குமார் (28), செல்வபுரம் நஞ்சப்பா கார்டனை சேர்ந்த சன்பர் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 கத்தி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe