பிளஸ் 1 தேர்வு முடிவு: கோவை தான் 'டாப்'.. எந்த மாவட்டம் எந்த இடம்?

published 9 months ago

பிளஸ் 1 தேர்வு முடிவு: கோவை தான் 'டாப்'.. எந்த மாவட்டம் எந்த இடம்?

கோவை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8,11,172 மாணவர்கள் இந்தாண்டு பிளஸ் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில்  87.26 சதவீதம் பேரும், மாணவிகள் 94.69 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் கோவை மாவட்டத்தில் 96.02 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது.

இதற்கு அடுத்த இடங்களில் உள்ள மாவட்டங்கள் பட்டியல் பின்வருமாறு:

ஈரோடு 95.56%
திருப்பூர் 95.23%
விருதுநகர் 95.06%
அரியலூர் 94.96%
பெரம்பலூர் 94.82%
சிவகங்கை 94.57%
திருச்சி 94.0%
குமரி 93.96%
தூத்துக்குடி 93.86%
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe