குடி போதையால் காந்திபுரத்தில் கொடூர விபத்து! ரோடு க்ராஸ் பண்ணும் போது கவனமா இருங்க ப்ளீஸ்!!

published 9 months ago

குடி போதையால் காந்திபுரத்தில் கொடூர விபத்து! ரோடு க்ராஸ் பண்ணும் போது கவனமா இருங்க ப்ளீஸ்!!

கோவை: கோவை காந்திபுரத்தில் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில், குறிப்பிட்டு பேருந்தை பிடிப்பதற்காக மக்கள் அலைமோதிக் கொள்வது வழக்கம்.

அப்படி, ஒரு நபர் இன்று காலை பேருந்து நிலையத்தின் இடது புறம் இருந்து, இரண்டு பேருந்துகளுக்கு இடையே புகுந்து, வலதுபுறம் செல்ல முயற்சித்தார்.

இதனை அறியாத, மது போதையில் முன்னால் இருந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கி இயக்க, இரு பேருந்துகளின் இடையே அந்த நபர் சிக்கி உடல் நசுங்கி, பலியானார்.

மது போதையில் இப்படி விபத்தை ஏற்படுத்திய டிரைவரை பார்த்து கொதிப்படைந்த சக டிரைவர்கள், பொதுமக்கள் குடிபோதை ஆசாமியை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இந்த சம்பவம், அங்கிருந்த பயணிகள் மத்தியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சாலையை சட்டென கடந்து விடலாம் என நாம் நினைக்கும் நொடிப்பொழுது நம்மை இப்பூவுலகில் இருந்து பிரித்துவிடும் அளவுக்கு கொடூரமான என்பதை நாம் அனைவரும் இந்த விபத்தில் இருந்து உணர்வோம். பொறுமைகாப்போம்.

விபத்து குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய குடிபோதை டிரைவரை சக டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவை காண: https://youtube.com/shorts/q72cSkho0V4?feature=share

தனியார் பேருந்து ஓட்டுநர்களால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் சூழலில், இந்தப் பிரச்சனைகளை எல்லாம் களைய வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கோவை மக்கள் கொதிப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தகைய அதிகாரிகளுக்கு தமிழக அரசு கிடக்குப் பிடி போட வேண்டிய நேரம் இது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe