ஆன்லைன் வேலை என வந்த வாட்ஸ் ஆப் மெசேஜ்...! லிங்க்-ஐ தொட்ட கோவை வாலிபரிடம் மோசடி!

published 9 months ago

ஆன்லைன் வேலை என வந்த வாட்ஸ் ஆப் மெசேஜ்...! லிங்க்-ஐ தொட்ட கோவை வாலிபரிடம் மோசடி!

கோவை: சரவணம்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ்கரண்(37). பிஎஸ்சி பட்டதாரியான இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார். அப்போது அவரது வாட்ஸ் ஆப்புக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதன் லிங்க்கை கிளிக் செய்து விவரங்களை தேடினார். அதில் தாங்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் முடித்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பி சுபாஸ்கரண் அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கில் சிறிய தொகை அனுப்பியதில் குறிப்பிட்ட லாப தொகை கிடைத்தது. தொடர்ந்து அவர் 5 கட்டங்களாக ரூ. 5,96,368 அனுப்பினார்.

ஆனால் அதன்பின்பு அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe