கோவையில் மளிகை கடையில் ரூ. 1.25 லட்சம் திருட்டு…

published 8 months ago

கோவையில் மளிகை கடையில் ரூ. 1.25 லட்சம் திருட்டு…

கோவை: கோவை வெள்ளமடை அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் மனைவி சிந்து (32).

இவர்கள் பீளமேடு நேரு நகரில் மளிகை கடை நடத்தி வந்தனர். தொழில் நஷ்டம் காரணமாக மனம் உடைந்த பொன்ராஜ், சிந்து ஆகியோர் விஷம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த மளிகைக்கடையின் கட்டிட உரிமையாளரான ரங்கராஜன், கவிதா உள்ளிட்ட சிலர் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று 5 பவுன் தங்க நகை, ரூ. 1.25 லட்ச, வீட்டு பத்திரம், ஜிஎஸ்டி ஆவணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்து சென்றுவிட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சிந்து அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் கடை பூட்டை உடைத்து திருடிய நபர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடை வாடகை தராமல் 2 மாதத்திற்கு மேலாக கடையை பூட்டி வைத்திருந்ததால் அத்துமீறி நுழைந்து பொருட்களை இவர்கள் எடுத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe