கோவையில் மயக்கமடைந்த பெண் ஊழியரிடம் கைவரிசை!

published 8 months ago

கோவையில்  மயக்கமடைந்த பெண் ஊழியரிடம் கைவரிசை!

கோவை:  கோவை ,ஆவாரம் பாளையம் இளங்கோ நகரில் பிரபல பல் மருத்துவமனை உள்ளது. இதன் அருகிலேயே மருந்துக்கடையும் செயல்பட்டு வருகிறது.
 

பல் மருத்துவமனையில் ஆவாரம்பாளையம் ,இளங்கோ நகரை சேர்ந்த சூரிய நாராயணன் என்பவரது மனைவி முத்துப்பாண்டி அம்மாள் (வயது 26) ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று முத்துப்பாண்டி அம்மாள் வேலைக்கு சென்றார். 

அப்போது பல் ஆஸ்பத்திரி அருகில் சென்றதும் அவருக்கு தலை சுற்றி மயக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அங்கு மருந்து கடையில் பணியாற்றி வரும் சக பெண் ஊழியர் ரம்யா என்பவரிடம் கூறினார். அவரு உடனே முத்து பாண்டியம்மாளை வந்து கடையில் படுத்து ஓய்வு எடுக்கும்படி கூறியுள்ளார்.
 

அதன்படி முத்துப்பாண்டி யம்மாள் ஓய்வெடுத்தார். பிறகு பாண்டியம்மாளை, அவரது கணவர் வந்து அழைத்துச் சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மயக்கம் அடைந்து விழுந்த போது நகையை யாரோ திருடி இருக்கலாம் என சந்தேகம் அடைந்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டது.மருந்து கடை ஊழியர் ரம்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe