கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் வழக்கம் நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் முகாம்- எப்போது இருந்து தெரியுமா?

published 8 months ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் வழக்கம் நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் முகாம்- எப்போது இருந்து தெரியுமா?

கோவை: 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து அன்று முதல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் அவர்களது மனுக்களை மனு பெட்டிகளுக்கு செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் 2024 நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் எதிர்வரும் 10.06.2024 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe