கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு!

published 7 months ago

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு!

கோவை: பி.எஸ்.ஜி.ஆர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாந்தி ஆசிரமத்தின் தலைவர் கேசெவினோ அறம் கலந்து கொண்டு முதன் முதலாக கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு கல்லூரி வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் தலைவர் நந்தினி மாணவிகளை வரவேற்றுப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இக்கல்லூரியில் பயின்ற இரண்டு மாணவிகள் கீதா, மற்றும் பிரியா ஆகியோர் தங்களது கல்லூரி அனுபவங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகரும், பாடகியுமான சாருமதி முரளிதரன் தன்னை செம்மைப் படுத்திய கல்லூரி வாழ்க்கை குறித்து மாணவிகளிடம் பேசினார்.

மேலும் மாணவிகளுக்காக சிறப்புப் பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார். மேலும் கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு அவர்களின் பயத்தை நீக்கும் வகை மாணவி பார்வதி சிறப்புரையாற்றினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe