கோவையில் இரண்டு மாதகால, வயிற்றுபோக்கு தடுப்பு மூகாம்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

published 7 months ago

கோவையில் இரண்டு மாதகால, வயிற்றுபோக்கு தடுப்பு மூகாம்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

கோவை: இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 5.8% வயிற்று போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவிற்கு அடுத்தபடியாக இது ஒரு பொது சுகாதார பிரச்சனை ஆகும். நம் நாட்டில் வருடத்திற்கு சுமார் 50000 குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கிறார்கள் குழந்தைகளுக்கு பெருபாலும் கோடை மற்றும் பருவ மழை காலங்களில் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கிற்கு மிக முக்கிய காரணங்கள் சுகாதாரமற்ற குழந்தை வளர்ப்புமுறைகள். கை சுத்தம் பேணாமல் இருத்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.

வயிற்றுப்போக்கை தடுக்க பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் ஊட்டுதல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு உட்கொள்ளுதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஓஆர்எஸ் (ORS) மற்றும் ஜிங்க் (ZINC) மாத்திரைகளை வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு தக்க சமயத்தில் அளிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்கலாம். இதனை கருத்தில்கொண்டு தமிழக அரசு "தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்" நடைபெற திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்த்தல். இந்த முகமானது ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இரு மாதங்கள் (பதன் மற்றும் ஞாயிறு நீங்கலாக) தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.

இம்முகாமின் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் 21.06.24 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது சுகாதார துறை இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அனைவருக்கும் இம்முகாமின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இம்முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் வயிற்றுப்போக்கு குறித்து விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை
அனைத்து குடும்பங்களுக்கும் பயிற்றுவிப்பார்கள்.

ஐந்து வயதிற்குட்பட்ட
குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு ஓஆர்லஸ் (ORS) பொட்டலங்கள்
தலா ஒரு குழந்தை வீதம் விநியோகிப்பார்கள். மேலும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளை கண்டுபிடித்து ஓஆர்எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரை அளித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்து சிகிச்சை
மேற்கொள்ளப்படுவார்கள்.

இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 3,04,951 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயனடைய உள்ளார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe