சிங்காநல்லூரில் பச்சிளங்குழந்தை சடலம் மீட்பு!

published 7 months ago

சிங்காநல்லூரில் பச்சிளங்குழந்தை சடலம் மீட்பு!

கோவை: கோவை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகர் 5வது தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில் நேற்று ஆண் குழந்தை சடலம் கிடந்தது.

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறந்த சில நாட்களே ஆன அந்த குழந்தையை வீசி சென்றது யார்? குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொழிலாளி பலி

கோவை: கோவை சிவானந்தா காலனி அண்ணாநகரை சேர்ந்தவர் பரந்தாமன்(38). பேப்ரிகேசன் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா(36).

இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட சண்டையில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பரந்தாமன் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று பரந்தாமன் டாடாபாத் 7வது தெருவில் உள்ள ஒரு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை சக ஊழியர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரண்யா ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிக்கு அமர்த்திய காண்டிராக்டர் சலீம் மற்றும் கட்டிட உரிமையாளார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe