கோவையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்தவர் பிடிப்பட்டார்- 12 வாகனங்கள் மீட்கப்பட்டது...

published 7 months ago

கோவையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்தவர் பிடிப்பட்டார்- 12 வாகனங்கள் மீட்கப்பட்டது...

கோவை: கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சூலூர் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

அதன் பேரில், சூலூர் காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரியை தேடி வந்த நிலையில் சூலூர் KMCH மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அவ்வழியாக வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த கௌதம் (34) என்பவரை விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார். 

 

இந்நிலையில் காவல் துறையினர் அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளியிடம் இருந்து சூலூர், கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், பீளமேடு, திண்டுக்கல், சத்தியமங்கலம், காட்டூர் என பல்வேறு பகுதிகளில் திருடு போன 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe