கோவையில் ஏடிஎம் மையத்தில் பேட்டரி திருடிய தொழிலாளி கைது…

published 7 months ago

கோவையில் ஏடிஎம் மையத்தில் பேட்டரி திருடிய தொழிலாளி கைது…

கோவை: கோவை அடுத்த கோவில்பாளையம் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த கோபால் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றார். 

அப்போது உள்ளே நின்றிருந்த வாலிபரின் நடவடிக்கை சந்தேகப்படும்படி இருந்தது. ஏடிஎம் எந்திரம் செயல்படாத நிலையில், அந்த வாலிபரின் கையில் ஏ.டி.எம் எந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் 4 யுபிஎஸ் பேட்டரிகள் இருந்தது.
எந்திரம் பழுது பார்க்க வந்தீர்களா? என அந்த வாலிபரிடம் கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். 

உடனே கோபால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவரை கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பேட்டரி திருட முயன்றது நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்த கூலி தொழிலாளி செந்தில்குமார்(45) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe