காய்ச்சலுக்கு ஊசி- கோவையில் 9 வயது சிறுவன் பரிதாப பலி…

published 6 months ago

காய்ச்சலுக்கு ஊசி- கோவையில் 9 வயது சிறுவன் பரிதாப பலி…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்(45). நகைப்பட்டறை ஊழியர். இவரது சொந்த ஊர் கேரளா ஆகும். இவரது மகன் தன்வின்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். 

இந்நிலையில், சிறுவனுக்கு கடந்த 5ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து பெற்றோர் சிறுவனை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று காய்ச்சலுக்கு ஊசி போட்டனர். இதனையடுத்து ஊசி போட்ட இடத்தில் சிறுவனுக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனை மீண்டும் அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டியபோது, மருந்து தடவினால் வீக்கம் குறைந்து விடும் என தெரிவித்தனர். 

ஆனாலும் சிறுவனுக்கு வீக்கம் குறையவில்லை. வலியால் துடித்தான். இதனையடுத்து ரமேஷ் தனது சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து ரமேஷ் கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe