பைக்கில் முந்திச்சென்றது ஒரு குத்தமா?.. கோவையில் சொமேட்டோ டெலிவரி பாய்க்கு அடி உதை..!

published 2 years ago

பைக்கில் முந்திச்சென்றது ஒரு குத்தமா?.. கோவையில் சொமேட்டோ டெலிவரி பாய்க்கு அடி உதை..!

கோவை : சாய்பாபா காலனி பகுதியில் சொமாட்டோ உணவு டெலிவரி பாய்க்கு அடி உதை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் ஸ்ரீ விக்னேஷ் (18). இவர் சொமேட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு வந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸ்ரீ விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சாய்பாபா காலனி பகுதியில் சென்று கொண்டிருன்ரார்.

அப்போது பைக்கில் தனக்கு முன்னே சென்றவர்கள் ஸ்ரீ விக்னேஷ் முந்திச்சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஸ்ரீ விக்னேசை தடுத்த் நிறுத்தி ரயில்வே டிராக் பகுதிக்கு அழைத்து சென்று கருங்கற்க்களால் அடித்திருக்கின்றனர்.  மேலும், அவரது உடைமைகளை பறித்துச் சென்றனர்.

காயமடைந்த வாலிபருக்கு நான்கு தையல் போடப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீ விக்னேஷ் அளித்த புகாரின் பேரில்
சாய்பாபா காலனி போலிசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை  தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe