கோவையில் நள்ளிரவில் நடந்த விபத்து- ஊர்காவல்படை வீரர் பலி, காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்...

published 6 months ago

கோவையில் நள்ளிரவில் நடந்த விபத்து- ஊர்காவல்படை வீரர் பலி, காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்...


கோவை, பீளமேட்டில் அடையாளம் தெரியாத கார் மோதி ஊர்க் காவல் படை வீரர் உயிரிழப்பு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகாயம் அடைந்தார்.


கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (34). ஊர்க் காவல் படை வீரர். இவர் நள்ளிரவு 2 மணியளவில் கோவை பீளமேடு காவல் உதவி ஆய்வாளர் ரவி என்பவருடன் ஸ்கூட்டரில்  ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அவிநாசி சாலையில் கொடிசியா அருகே செல்லும் போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். முகம், தலை, கை, கால் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்கூட்டர் மீது மோதிய காரின் அடையாளம் தெரிகிறதா? என அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe