கோவையில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி!

published 6 months ago

கோவையில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி!

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பேரை மிரட்டி செல்போன், பணம் பறித்தவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பசுபதி(19). மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலாளி.

இவர் நேற்று ராமநாதபுரம் ஆல்வின் நகர் விநாயகர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 500 ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து பசுபதி ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூனன்(60). இவர் அதேபகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 300 ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், பணம் பறித்தது குனியமுத்தூர் செம்மொழி நகரை சேர்ந்த சிக்கந்தர் பாஷா பர்வேஷ்(21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe