தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறிப்பு- சிறுவன் உட்பட 3 பேர் கைது...

published 6 months ago

தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறிப்பு- சிறுவன் உட்பட 3 பேர் கைது...

கோவை: கோவை உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அஜய்குமார் (24), லேத் பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை மீன் வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது சிவா நகர் சுடுகாடு அருகே சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர் அஜய்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் அஜய்குமாரை பீர் பாட்டில் மற்றும் கத்தியால் குத்தினர். 

பிறகு அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதில், காயம் அடைந்த அஜய்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹிரித்திக் பாலாஜி (19), தனியார் ஊழியர் பிரவீன்குமார் (18), நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் கத்தியால் குத்தி பணம் பறித்தது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe