விநாயகர் சதுர்த்தி விழா - சிலை வைத்து வழிபாட ஆசைபடும் கோவை மலைவாழ் பழங்குடி மக்கள்...

published 5 months ago

விநாயகர் சதுர்த்தி விழா - சிலை வைத்து வழிபாட ஆசைபடும் கோவை மலைவாழ் பழங்குடி மக்கள்...

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி சுற்று வட்டார பகுதிகளான தும்மனூர், செம்புகண்டி, ஜம்புகண்டி போன்ற 5  மலை கிராமங்களில் உள்ள நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாடுவதை போன்று  மலை கிராமங்களில் நாங்களும் விநாயகரை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட முடிவு செய்து உள்ளனர்.

இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.

இந்நிலையில் காவல் துறையினர் புதிதாக விநாயகர் வைத்து வழிபட உரிய அனுமதி பெற்ற பின்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மலைவாழ் கிராமம் மக்கள் தாங்களும் விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

மாநகரங்களில் வாழும் மக்கள் கொண்டாடுவது போன்று தாங்களும் தாங்கள் குழந்தைகளும் வழிபாடு நடத்தி கொண்டாடி மகிழ அனுமதி அளிக்கப்படுமா..? என எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் மலை கிராமத்து பழங்குடியின மக்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe