விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் கோவையில் பறிமுதல்...

published 5 months ago

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் கோவையில் பறிமுதல்...

கோவை: சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில்  கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தபடுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை மேற்கொண்டனர்.

அதில் தங்கம் பிடிபடாத நிலையில் விமானத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது விமானத்தின் உள்ளே கால் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஒட்டப்பட்டு இருந்த பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில் தங்க பிஸ்கட்டுகள் டேப்பால் சுற்றப்பட்டு, விமானத்தின் உள்பகுதியில் ஒட்டப்பட்டு இருந்தது.அதில் 24 காரட் சுத்தமான தங்க கட்டிகள் என்பதை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்க கட்டிகளின் மொத்த எடை 1399 கிராம் எனவும் மதிப்பு சுமார் ரூ. 1.02 கோடி எனவும் கணக்கிட்டுள்ளனர்.

பிடிபட்ட 
தங்கத்திற்கு பயணிகள் யாரும் உரிமை கோரத நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe