கோவில்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் பறிமுதல்- ஒருவர் கைது...

published 5 months ago

கோவில்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் பறிமுதல்- ஒருவர் கைது...

கோவை: கோவை, மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்து இருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர், கீரணத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்து இருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூபாய் 1,14,400 மதிப்பு உள்ள  சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe