கோவையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை...

published 5 months ago

கோவையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை...

கோவை: கோவை, தொண்டாமுத்தூர், அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்து றையினர் கூண்டு வைத்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக, அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த, 8 ம் தேதி அதிகாலை, அட்டுக்கல் செல்லும் வழியில் உள்ள விவேகானந்தன் என்பவரின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, கன்றுக் குட்டியை கடித்துக் கொன்றது.

சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர் வனப் பகுதிக்குள் விட வேண்டும் என, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தினர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரின் அனுமதி கிடைத்தது.

இதை அடுத்து, கெம்பனூர் பிரிவில் இருந்து அட்டுக்கல் செல்லும் வழியில் உள்ள பெரும்பள்ளத்தில், வனத்துறையினர்  இரவு, கூண்டு வைத்து உள்ளனர்.

கூண்டில், சிறுத்தைக்கு உணவாக இறைச்சித் துண்டுகளை வைத்து உள்ளனர். இப்பகுதியில், பல இடங்களிலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், கூடுதலாக மற்றொரு இடத்திலும் கூண்டு வைக்க, வனத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe