கோவையில் மூன்று நாட்களில் 965 பேருக்கு அபராதம்

published 5 months ago

கோவையில் மூன்று நாட்களில் 965 பேருக்கு அபராதம்

கோவை: கோவை மாநகரில் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொள்ள போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தவிட்டார்.

அதன்பேரில், கடந்த மாதம் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய 41 ஒலிப்பான்களை அகற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், நகரில் உரிய அனுமதியின்றியும், பாதசாரிகளுக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த 9 விளம்பர பதாகைகள் மற்றும் 9 கடைகள் அகற்றப்பட்டது.

கேட்பாரன்றி இருந்த 85 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 107 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டது.

போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த 2 தள்ளுவண்டிகளும் அகற்றப்பட்டது. மேலும், கடந்த 3 நாட்களாக இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த 965 பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe