சூலூர் அருகே கார் ஷோரூமில் தீ விபத்து- 10க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசம்...

published 2 weeks ago

சூலூர் அருகே  கார் ஷோரூமில் தீ விபத்து- 10க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசம்...

கோவை: சூலூர் அருகே உள்ள ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூம் அண்ட் சர்வீஸ் எனும் கார் விற்பனையகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பற்றியுள்ளது. 

அந்த தீயானது மள மளவென பரவி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும்  பரவியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவோர் முதல் கட்டமாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் தீயணைப்பு படை மற்றும் காவல் துறையினருக்கு காவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமானது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து ஷோரூம் க்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இந்த தீ விபத்து குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe