சிங்காநல்லூரில் வியாபாரி வீட்டில் நகை பணம் கொள்ளை...

published 1 week ago

சிங்காநல்லூரில் வியாபாரி வீட்டில் நகை பணம் கொள்ளை...

கோவை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன்(45). இவர் சிங்காநல்லூர் நேதாஜிபுரம் சக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், கணேசன் கடந்த 3ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண விழாவுக்காக குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கணேசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே கோவை விரைந்து வந்து வீட்டுக்கு சென்று பார்த்தார். 

அப்போது வீட்டு பீரோவில் இருந்த 6. 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe