மிலாது நபி- கோவையில் பொதுமக்கள் 40,000 பேருக்கு தயாரான மட்டன் பிரியாணி...

published 2 days ago

மிலாது நபி- கோவையில் பொதுமக்கள் 40,000 பேருக்கு தயாரான மட்டன் பிரியாணி...

கோவை: இறை தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.  அதன்படி இன்று கோவையில் பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்காக தயாராகி உள்ளது.

இதில் 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோ க்கும் மேற்பட்ட பிரியாணி அரிசி,டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை,கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்களைக் கொண்டு 250 ராட்சச  பாத்திரங்களை கொண்டு 300-க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கப்பட்டது.
 

தொடர்ந்து இன்று காலை பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் உக்கடம்,ஜி.எம் நகர்,கோட்டைமேடு,கரும்புக்கடை ஆகிய பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணிகள் வழங்க உள்ளனர்.

முன்னதாக மிலாது நபி பண்டிகையொட்டி பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe