கோவையில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள்…

published 5 months ago

கோவையில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள்…

கோவை; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று நிகழ்வுகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.  

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் ஆர். அம்பலவாணன், இத க ப சிறப்பு விருந்தினராக கலந்து தலைமை உரையாற்றினார் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் உறுப்பினர் முனைவர் லவ்லி நா லிட்டில் பிளவர்  கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். 

இ டி ஐ ஐ  நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளர் திரு. சி.சண்முகராஜ் கருத்துரை வழங்கினார் பல்கலைக்கழகத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். இ டி ஐ ஐ நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.திருமதி.சரண்யா நன்றி உரையாற்றினார். 

இரண்டு நாட்கள் நடைபெறும் இறுதிப்போட்டியில்  சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களை சார்ந்த 29 அணிகள் 18.09.2024 அன்றும், 19.09.2024 அன்று சிவகங்கை திருநெல்வேலி மற்றும் திருச்சி கலந்து கொள்வார்கள். மேற்கூறிய மண்டலங்களில் உள்ள அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe