முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்- பிரியாணி வழங்கி கொண்டாடிய கோவை திமுகவினர்...

published 4 months ago

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்- பிரியாணி வழங்கி கொண்டாடிய கோவை திமுகவினர்...

கோவை: சட்டவிரோத  பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சுமார் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர் பலமுறை ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையிட்டு மனு மீதான விசாரணையில் தற்பொழுது அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை திமுகவினர் பலரும் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் திமுக இளைஞரணியினர் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe