நாமக்கல் கண்டெய்னர் லாரி விவகாரத்தில் ஒரு குற்றவாளியை கோவைக்கு அழைத்து வந்தனர்...

published 4 months ago

நாமக்கல் கண்டெய்னர் லாரி விவகாரத்தில் ஒரு குற்றவாளியை கோவைக்கு அழைத்து வந்தனர்...

கோவை: கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் மூன்று ஏ.டி.எம் களில் 65 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு   கண்டெய்னர் லாரி ஒன்றில் தப்பி சென்ற 7 பேரை, நாமக்கல் மாவட்டத்தில் தமிழக போலீசார் மடக்கி பிடித்தனர். 

அப்போது  லாரியில் இருந்தவர்கள் துப்பாக்கியை கொண்டு போலீசாரை சுட்டு தப்ப முயன்றதாக கூறப்படும். நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அசார் அலி என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே காயமடைந்த அசார் அலியை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு போலிசார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த பிறகு இவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe