கோவையில் இரண்டு தினங்களாக கனமழை பெய்த நிலையில் இன்று சாரல் மழை பெய்தது...

published 4 months ago

கோவையில் இரண்டு தினங்களாக கனமழை பெய்த நிலையில் இன்று சாரல் மழை பெய்தது...

கோவை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை நீலகிரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி கோவையில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்றைய தினம் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழையும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழையும் பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இன்று கோவை மாநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு நடந்து செல்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe