கோவையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில் விபத்து- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 4 months ago

கோவையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில் விபத்து- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை, சூலூர் அருகே அதிகாலை நேரத்தில் அனுமதி இன்றி நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில் மாட்டு வண்டி எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாட்டு வண்டியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை வேளையில் போலீசாரின் எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் இளைஞர்கள் சிலர் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டி ஒன்று எதிர்புறமாக வந்த லாரியின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. 

இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள், அதனை  பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்  தன்னார்வலர்கள் சிலர், இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாட்டு வண்டியை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த மாடுகளின் நிலை என்னவானது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வித முன்ன அனுமதியும் இல்லாமல் இளைஞர்கள் சிலர் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டு விபத்துக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DA5YUiVAlx2/?igsh=MTdpZW84N2Iwa3dobQ==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe