கோவை  மக்களே ரெடியா..? வாலாங்குளத்தில் நாளை முதல் படகு சவாரி..!

published 2 years ago

கோவை  மக்களே ரெடியா..? வாலாங்குளத்தில் நாளை முதல் படகு சவாரி..!

கோவை: கோவை வாலாங்குளத்தில் படகு சவாரியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவங்கி வைக்கிறார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.  இதில் உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தின் கரைப்பகுதியில் நடைபாதை, சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த வாலாங்குளத்தில் பொழுது போக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினருடன் இணைந்து ரூ.45 லட்சம் மதிப்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது.  இதற்கான படகுகளும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த படகு இல்லத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடியே இந்த படகு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe