கணவரை காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள்- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர்…

published 4 hours ago

கணவரை காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள்- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர்…

கோவை: கோவை, துடியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலாஜி - காமாட்சி தம்பதியினர், பாலாஜி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் சிறுநீரக பிரச்சனை தொடர்பாக டயாலிசிஸ் சிகிச்சையும் பெற்று வந்தார். 

இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பாக ஒரு இடத்தை விற்றது, தொடர்பாக உறவினரை காண சென்றவர் காணவில்லை என கூறிய அந்தப் பெண். அவரை கண்டுபிடித்து கொடுக்க துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில், நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை தனது கணவரை காவல் துறையினர் கண்டுபிடித்து தரவில்லை எனவும், மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு கல்வி, வாழ்வாதாரம் வீட்டுக் கடன், என பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாலாஜியின் மொபைல் போன் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கிடைத்த நிலையிலும் பாலாஜி எங்கே ? இருக்கிறார் என தெரியாத சூழல் இருந்து வருவதால், காவல் துறையினர் உடனடியாக தனது கணவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது கணவர் எங்கு இருந்தாலும், வீட்டிற்கு வர வேண்டும் என கண்ணீர் மல்க காமாட்சி கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe