காஷ்மீர் தாக்குதல் எதிரொலி- கோவை ரயில் நிலையங்களில் பலத்த சோதனை!!!

published 20 hours ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி- கோவை ரயில் நிலையங்களில் பலத்த சோதனை!!!

கோவை: காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, கோயம்புத்தூர் ரயில்வே ஜங்ஷனுக்கு வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 

டெல்லிக்கு  செல்லும் முக்கிய ரயில்கள் கோவை ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றன. இதன் காரணமாக, கோவையில் ரயில்வே பாதுகாப்புத் துறையினரும், ரயில்வே வெடிகுண்டு சோதனை நிபுணர்களும், ரயில்வே போலீசாரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 

ரயில் பயணிகளின் உடமைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சுனில் குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தீவிர சோதனை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe